Type Here to Get Search Results !

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – தருமபுரியில் தொடக்கம்.


தருமபுரி, ஆகஸ்ட் 12 | ஆடி 27 - 


தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” இன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.


இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாலஜங்கமனஹள்ளி ஊராட்சியில், கூட்டுறவுத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இஆப., அவர்கள் திட்டத்தை மாவட்ட அளவில் தொடங்கி வைத்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1005 நியாயவிலைக் கடைகளின் மூலம் 26,781 குடும்ப அட்டைகளில் உள்ள 35,385 பயனாளிகளுக்கு மாதம் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொருட்கள் வழங்கப்படும். விநியோக வாகனங்கள் மின்னணு எடைதராசு, e-Pos இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் சீரமைக்கப்பட்டுள்ளன.


வட்ட வாரியான விபரங்கள்

  • தருமபுரி: 3,796 குடும்ப அட்டைகள் – 5,148 பயனாளிகள்

  • நல்லம்பள்ளி: 3,304 குடும்ப அட்டைகள் – 4,443 பயனாளிகள்

  • பென்னாகரம்: 4,413 குடும்ப அட்டைகள் – 5,915 பயனாளிகள்

  • பாலக்கோடு: 2,851 குடும்ப அட்டைகள் – 3,813 பயனாளிகள்

  • காரிமங்கலம்: 2,531 குடும்ப அட்டைகள் – 3,316 பயனாளிகள்

  • அரூர்: 3,985 குடும்ப அட்டைகள் – 5,205 பயனாளிகள்

  • பாப்பிரெட்டிப்பட்டி: 5,901 குடும்ப அட்டைகள் – 7,545 பயனாளிகள்



பாலஜங்கமனஹள்ளி, இருசன்கொட்டாய், நாகர்கூடல், கழனிகாட்டூர், மத்தாலப்பள்ளம், ஈச்சம்பட்டி ஆகிய நியாயவிலைக் கடைகளில் உள்ள 2,649 குடும்ப அட்டைகளில் 178 பயனாளிகள் இன்று மற்றும் நாளை (13.08.2025) வரை பயன்பெறுகின்றனர். இதில், இன்று பாலஜங்கமனஹள்ளி நியாயவிலைக் கடையில் மட்டும் 76 பயனாளிகள் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பெற்றனர்.


இந்நிகழ்ச்சியில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஷ்வரன், முன்னாள் அமைச்சர் முனைவர் பி. பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ திரு. தடங்கம் பெ. சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி மலர்விழி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் திரு. தணிகாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைய வழிவகுக்கும் இந்தத் திட்டம், உணவுப் பாதுகாப்பையும் சமூக நலனையும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884