தருமபுரி, 10 ஆகஸ்ட் 2025 | ஆடி 25—
தருமபுரி NDSO மகாத்மா காந்தி மாலைநேர பயிற்சி மையத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டும் விழா நடைபெற்றது. PSB டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் இயக்குநர் திரு. சுரேஷ்குமார் மற்றும் திருமதி மேனகா சுரேஷ்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தக பைகளை பரிசாக வழங்கினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மை தருமபுரி அமைப்பு செயலாளர் சகோதரர் தமிழ்செல்வன் மற்றும் அமைப்புசாரா தொழில் சங்கம் மாநில செயலாளர் திரு. கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வியின் அவசியம் மற்றும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி குறித்து உரையாற்றினர். இவ்விழாவில் MGTC ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை NDSO ஒருங்கிணைப்பாளர் வெ. பிரகாஷ் மேற்கொண்டார்.