Type Here to Get Search Results !

அரூர் அருகே சுடுகாட்டு பாதை மறிப்பு – மீட்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை.


அரூர், ஆக. 25 | ஆவணி 9 :


தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சி பூதிநத்தம் கிராமத்தில், சுடுகாட்டிற்கு செல்லும் பாதை மறிக்கப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சுமார் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக சுடுகாட்டிற்கு செல்ல பயன்படுத்திய சாலையை, ஒரு குடும்பத்தினர் முள், கற்கள் போட்டு மறித்ததோடு, பொதுமக்களைத் தடுக்க நாய்களை அவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு திரண்டு, பாதையை மீட்கக் கோரி முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் எந்த சமரசமும் எட்டப்படவில்லை.


முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகன் தெரிவித்ததாவது: “பூதிநத்தம் கிராம மக்களின் வசதிக்காக கால்வாயின் குறுக்கே கல்வெட்டு அமைக்கப்பட்டு சாலை வசதியும் குடிநீர் வசதியும் செய்யப்பட்டன. இது பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலை. தற்போது ஒரு குடும்பம் மட்டும் சொந்த உரிமை எனக் கூறி தடைகள் ஏற்படுத்துவது ஏற்க முடியாதது. மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, வட்டாட்சியர் உடனடியாக தலையிட்டு சுடுகாட்டு பாதையை மீட்டு தர வேண்டும்” என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies