அரூர், ஆக 25 | ஆவணி 9 -
மேலும், தூய்மை பணியாளர் குடியிருப்பு அருகிலுள்ள 3வது வார்டு பகுதி சர்வே எண் 136/2பி-யில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் பொதுவிநியோகத் திட்ட ரேஷன் கடை கட்டுவதற்கான தடையில்லா அனுமதி சான்று பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர், துணைத் தலைவர் மற்றும் 3வது வார்டு உறுப்பினர் முஸ்ரத் காதர் பாஷா ஆகியோரால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்கள் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் அ.இ.அ.திமுக அரூர் ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் திரு. ஆர்.ஆர். பசுபதி, அ.இ.அ.திமுக நகரச் செயலாளர் திரு. ARRS பாபு (எ) அறிவழகன், 8வது வார்டு உறுப்பினர் கலைவாணன், 15வது வார்டு உறுப்பினர் பூபதி, 18வது வார்டு உறுப்பினர் ரா. பெருமாள் உள்ளிட்டோர், மேலும் பல தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

