Type Here to Get Search Results !

ஏரியூர் அதியமான் பள்ளி அங்கீகாரத்தை ரத்து கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த தமிழ் புலிகள் கட்சியினர்.


தருமபுரி, ஆக 25 | ஆவணி 9:

ஏரியூர் மற்றும் அருகிலுள்ள அழகா கவுண்டனூரில் இயங்கி வரும் அதியமான் மெட்ரிக் பள்ளியில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் சீண்டல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி முதல்வராக உள்ள வினுலோகேஸ்வரன், 9-ம் வகுப்பு மாணவியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக பெற்றோரின் புகாரின் பேரில் பென்னாகரம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் போலீசார் பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் பரவலாக வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் மனு அளித்தன. தமிழ்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முனுசாமி அவர்கள் தலைமையில் மனு வழங்கப்பட்டது.

மனுவில், பள்ளி உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தற்போது படித்து வரும் மாணவர்களை அரசு பள்ளிகளில் உடனடியாக மாற்றி சேர்க்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நிவாரணம் வழங்கி, காவல் துறை சிறப்பு குழுவை அமைத்து இதுபோன்ற பிற சம்பவங்களையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இம்மனுவுக்கு தமிழ்புலிகள் கட்சியுடன் தலித் விடுதலை இயக்கம், இந்திய மூலநிவாசி காவல்படை, ஆதிதமிழர் கட்சி, மே 17 இயக்கம் மற்றும் பூர் ஆர்மி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884