Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அருகே ஆதரவற்று இறந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்.


பாப்பாரப்பட்டி, ஆக. 28 | ஆவணி 12 - 

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஆதரவின்றி வாழ்ந்து வந்தார். இவருக்கு எந்த உறவினரும் இல்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். உடனடியாக காவல்துறையினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


இவரது அடையாளம் தொடர்பான எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், இன்று பாப்பாரப்பட்டி காவல் நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் மதலைமுத்து, காவலர் மணிகண்டன், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் செந்தில், முனைவர் கிருஷ்ணன், தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி உடலை நல்லடக்கம் செய்தனர்.


மை தருமபுரி அமைப்பு "அமரர் சேவை" மூலம் இதுவரை 162 ஆதரவற்றோரும், ஏழ்மையில் இறந்தோரும் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளது. "மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோமென்பது" என்ற தொண்டுசெயலால் இவர்கள் சமூகத்தில் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies