Type Here to Get Search Results !

தேசிய பெண் குழந்தை தின விருது – 2025-26: விண்ணப்பங்கள் வரவேற்பு.


தருமபுரி, ஆகஸ்ட் 21, 2025 (ஆவணி 5):


“தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24” அன்று மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் 2025-26ஆம் ஆண்டிற்கான விருதிற்காக தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.


இந்த விருதிற்கான விண்ணப்பம் 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட, தமிழ்நாட்டில் வசிக்கும் பெண் குழந்தைகள் (31 டிசம்பர் நிலவரப்படி) சார்பில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


விருதிற்கான தகுதிகள்

  • பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவியிருக்க வேண்டும்.

  • பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் பங்களித்திருக்க வேண்டும்.

  • சிறுவர் திருமணங்களை தடுத்திருக்க வேண்டும்.

  • கல்வி, விளையாட்டு, கலை அல்லது பிற துறைகளில் தனித்துவமான / சிறப்பான சாதனை புரிந்திருக்க வேண்டும்.

  • பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை ஒழிக்க ஓவியம், கவிதை, கட்டுரை போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

  • “ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும்” என்று கருதப்படும் துறைகளில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் விதம்

தகுதியான பெண் குழந்தைகளின் பெயர்கள் மற்றும் சாதனைகள் குறித்து விவரிக்கப்படும் கருத்துருக்கள் 30.11.2025க்குள் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், பழைய மாவட்ட ஆட்சியரின் கூடுதல் வளாகம், தருமபுரி மாவட்டம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை நேரில் சந்திக்கலாம் அல்லது தொலைபேசி எண்: 04342 – 233088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies