தருமபுரி, ஆக 13 | ஆடி 27 -
தமிழ்நாடு அரசு, 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்மசக்கர பரிவர்த்தன திருவிழா புனிதப் பயணத்திற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்தர்களுக்கு மானியம் வழங்குகிறது. ECS முறையில், ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.5000 வரை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் பயனை பெற விரும்பும் பௌத்தர்கள், விண்ணப்பப் படிவங்களை தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெறலாம். மேலும் www.bcmbcmz.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான ஆவணங்களுடன் 30.11.2025க்குள், “ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.