தருமபுரி, ஆக. 19 | ஆவணி 3 –
இவரது அடையாளம் மற்றும் குடும்பத் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லையெனவும், அவருடன் பணிபுரியும் சில நண்பர்கள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. இந்த சூழ்நிலையில், அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான பொறுப்பை “மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர்” ஏற்றனர்.
ஓசூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிவக்குமார், மை தருமபுரி தலைவர் சதீஷ்குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் செந்தில், அய்யா மாதேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் ரோட்டரி எரிவாயு தகனம் மையத்தில் எரியூட்டப்பட்டது.
இதுவரை மை தருமபுரி அமைப்பின் மூலம் மொத்தம் 160 புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. “மரணிப்பவர்களுக்குக் கூட மனிதநேயம் பகிர வேண்டும்; மனிதநேயம் போற்றப்பட வேண்டும்” என அமைப்பினர் வலியுறுத்தினர்.
.gif)

.jpg)