Type Here to Get Search Results !

தருமபுரியில் ஸ்ரீ விஸ்வகர்மா முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்.


தருமபுரி, ஆக.06 | ஆடி 21 -


ஆடி மாதத்தை முன்னிட்டு, தருமபுரி துரைசாமி நாயுடு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வகர்மா முத்துமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிழா பக்தர்களின் பெரும் திரளுடன் விமர்சையாக அனுசரிக்கப்பட்டது. விழா கொடியேற்றம் மூலம் தொடங்கியது. பின்னர், பால்குட ஊர்வலம், திருவிளக்கு பூஜை மற்றும் குழ் ஊற்றும் விழா பக்திப் பரவசத்தில் சிறப்பாக நடைபெற்றன.


இதனைத் தொடர்ந்து, கோவிலிலிருந்து பூ கரகம் மற்றும் மாவிளக்கு எடுத்து, பெரியார் சிலை, பால்டிபோ வழியாக, காமாட்சி அம்மன் தெருவில் உள்ள ஸ்ரீ விருந்தாளி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனின் அருளைப் பெற தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies