Type Here to Get Search Results !

முதலமைச்சரின் வருகையையொட்டி விழா மேடை பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.


தருமபுரி, ஆக.7 | ஆடி 22 -


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்கு வரவுள்ளதை முன்னிட்டு, மாவட்டத்தின் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் கிராமம், பி.எம்.பி. கல்லூரி அருகில் ஏற்பாடு செய்யப்படும் விழா மேடையின் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் குறித்து இன்று (07.08.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேடை அமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்கள் வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்களை அவர் விரிவாக பரிசீலித்தார்.


இந்த நேரத்தில், தருமபுரி மக்களவை உறுப்பினர் திரு. ஆ.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், முன்னாள் அமைச்சர் முனைவர் பி. பழனியப்பன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி இரா. காயத்ரி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ஆய்வில் பங்கேற்றனர். முதலமைச்சரின் வருகையையொட்டி அனைத்துப் பணிகளும் திட்டமிட்டபடி, தரமான முறையில், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884