Type Here to Get Search Results !

MBBS முடித்த மாணவிக்கு தருமபுரி மக்கள் உதவியால் மாறிய வாழ்க்கை.


தருமபுரி, ஆகஸ்ட் 10 (ஆடி 25):


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கிராமத்தை சேர்ந்த மாலினி, 2023 ஜூன் மாதம் பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக்கல்லூரியில் தனது MBBS படிப்பை முடித்தார். அவருக்கு ரூ.9.5 இலட்சம் கல்விக் கட்டணம் பாக்கி இருந்ததால், கல்லூரி நிர்வாகம் Completion Certificate வழங்கவில்லை. இதனால் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாமல் அவர் சிரமப்பட்டார்.

பல உதவியாளர்கள் பேசியதன் பேரில் கல்லூரி நிர்வாகம் ரூ.1.5 இலட்சம் கட்டணத்தை குறைத்தது. ஆனால் மீதமிருந்த ரூ.8 இலட்சத்தைச் செலுத்த வேண்டிய நிலை தொடர்ந்தது. இந்த தகவலை டாக்டர் மோகனசுந்தரம் அவர்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்ததை தொடர்ந்து, தருமபுரி உறவுகள் குழு சார்பில் ரூ.83,200 நன்கொடை வழங்கப்பட்டது.


பின்னர், 2025 ஜனவரியில் விஜய் பாய்ஸ் 2002 பள்ளி நண்பர்கள் குழுவும் ரூ.1,60,000 நன்கொடையாக வழங்கியது. இவ்விரு தரப்பினரும் சேர்த்து மொத்தம் ரூ.2,43,200 வழங்கினர். மீதமிருந்த தொகையும் பல நற்பண்புள்ளவர்களின் உதவியால் 2025 பிப்ரவரியில் முழுமையாக செலுத்தப்பட்டது.


இதையடுத்து, டாக்டர் மாலினிக்கு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் இருந்து பதிவு சான்றிதழ் கிடைத்தது. நன்றியைத் தெரிவிக்க, அவர் மற்றும் அவரது உறவினர்கள் தருமபுரிக்கு வந்து, தருமபுரி உறவுகள் குழு மற்றும் விஜய் பாய்ஸ் 2002 குழுவினருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர். மேலும், அவருக்கு பெயர் பதித்த ஸ்டெதஸ்கோப் மற்றும் ஒயிட் கோட் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884