Type Here to Get Search Results !

வாழைத்தோட்டம் கோயில் திருவிழாவில் பீர் பாட்டில் தாக்குதல் – 2 வாலிபர்கள் படுகாயம்.


பாலக்கோடு, ஆக. 8 | ஆடி 23 


பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அன்றிரவு நடைபெற்ற ஆடல்–பாடல் நிகழ்ச்சியின் போது, அதே பகுதியை சேர்ந்த சுசீந்திரன் (23) மற்றும் ஞானசுந்தரம் (27) ஆகியோருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது.


தகராறின் போது, சுசீந்திரன் தன் கையில் இருந்த பீர் பாட்டிலால் ஞானசுந்தரத்தின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஞானசுந்தரம் தலையில் காயமடைந்து இரத்தம் சிந்தி வலியுடன் அலறினார். இதை தடுக்க வந்த பிரபு என்பவரையும் சுசீந்திரன் அதே பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஞானசுந்தரம் மற்றும் பிரபு ஆகியோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஞானசுந்தரம் அளித்த புகாரின் பேரில், பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884