Type Here to Get Search Results !

மகேந்திரமங்கலம் அருகே நிலத் தகராறில் அதிமுக கிளை செயலாளர் மீது பாமக நிர்வாகி கொலைவெறி தாக்குதல்.


மகேந்திரமங்கலம், ஆகஸ்ட் 9, 2025 – ஆடி 24


மகேந்திரமங்கலம் அடுத்த ஒட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (35) அதிமுக கிளை செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 11 சென்ட் நிலம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பாமக நிர்வாகி சரவணன், முனியப்பன் ஆகியோருடன் கடந்த சில ஆண்டுகளாக நிலத் தகராறு நீடித்து வருகிறது.


சம்பந்தப்பட்ட நிலத்திற்கான பத்திரங்கள் மற்றும் வருவாய் துறை ஆவணங்கள் முறையாக இருந்தும், சில மாதங்களுக்கு முன்பு சரவணன் மற்றும் முனியப்பன், கணேசனின் வீட்டில் புகுந்து கொடுவாளால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, கணேசனின் தாய் சின்னம்மாளின் தலையில் அடிபட்டு காயமடைந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டாலும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


நேற்று இரவு மீண்டும் கணேசனின் வீட்டில் புகுந்த சரவணன், முனியப்பன் ஆகியோர், அவரை கொலை செய்யும் நோக்கில் தாக்கி, காலில் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த கணேசன் தற்போது பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சரவணன் மற்றும் முனியப்பனே காரணம். எனக்கு உயிர் பாதுகாப்பு அளித்து, இவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் கணேசன். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884