Type Here to Get Search Results !

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் நிறுத்தம் – பொதுமக்கள் அதிருப்தி.


பாலக்கோடு, ஜூலை 29 | ஆடி 12 -

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரத்தில் தினமும் சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். நகரத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் பேருந்து நிலையத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. அதற்குடன், நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தினமும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பல்வேறு விதிமுறைகளை மீறி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக பஸ்நிலையத்தில் நிறுத்தப்படுவது பொதுமக்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்படுத்தி வருகிறது. செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவது, ஒரே கையில் வாகனம் இயக்குவது, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்துவது, சீருடை இன்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன.


இதனால் போக்குவரத்து நெரிசலும், பாதுகாப்பு குறையும் நிலை உருவாகியுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாரளித்து வருகின்றனர். “இவ்வாறான விதிமுறைகளை மீறும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர்களிடம் நெறிப்படுத்தும் நடவடிக்கைகளை போக்குவரத்து துறை மற்றும் காவல்துறையினர் விரைந்து மேற்கொள்ள வேண்டும்,” என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884