Type Here to Get Search Results !

அரூர் அரசு பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.


அரூர், ஜூலை 2 (ஆனி 18):

அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், புகையிலை ஒழிப்பை முன்னிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் படம் வரைப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி வளாகத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்படுத்தக்கூடாது என்ற அரசின் அறிவிப்பை பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் தெளிவாக எடுத்துரைக்க இது நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் திரு. ஆறுமுகம் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் திரு. பழனிதுரை மற்றும் ஆசிரியர்கள் குப்புசாமி, மூர்த்தி, கமலநாதன், முருகேசன், சங்கர் ஆகியோரின் மேற்பார்வையிலும் விழிப்புணர்வு வலைச்சுவர் ஓவியங்கள் தயாரிக்கப்பட்டன. பிடிஏ (PTA) தலைவர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புகையிலை தடுக்கும் உறுதிமொழி எடுத்தனர். “100 மீட்டருக்குள் புகையிலை பயன்படுத்துபவர்களை காவல்துறைக்கு அறிவிப்போம்” என உறுதி கூறிய அவர்கள், பள்ளிக்கூடம் மற்றும் சுற்றுப்புறத்தில் சுகாதாரத்தையும், மாணவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884