Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

எர்ரணஅள்ளி மேம்பாலம் அருகே நொரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் – வாகன ஓட்டுநர் தப்பி ஓட்டம்.


பாலக்கோடு, ஜூலை 9 (ஆனி 24)

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தொடர்ந்து ஏரிகளில் இருந்து நொரம்பு மண் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக எர்ரணஅள்ளி, கரத்தாரப்பட்டி, தண்டு காரணஅள்ளி, ரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் இது அதிகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.


இதையடுத்து மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ், இத்தனைக்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், நேற்று விடியற்காலை தருமபுரி புவியியலாளர் உதவி இயக்குநர் புவனமாணிக்கம் தலைமையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, எர்ரணஅள்ளி மேம்பாலம் அருகே ஏரியிலிருந்து திருட்டுத் தனமாக நொரம்பு மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வாகனத்தை தடுத்ததோடு, வாகன ஓட்டுநர் இடத்தை விட்டு தப்பி ஓடியதால் அவர் தலைமறைவானார்.


சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, பாலக்கோடு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884