Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தோட்டக்கலைத் துறை நலத்திட்டங்கள் மூலம் தருமபுரியில் ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயன் – மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.


தருமபுரி, ஆடவை (ஆனி) 17-

தருமபுரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் வாயிலாக கடந்த 4 ஆண்டுகளில் 18,258 பயனாளிகள் ரூ.521.29 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்த “முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம்” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் மாடித்தோட்டம் அமைப்பதற்காக ரூ.450 மானிய விலையில் 1313 தொகுதிகள், ஊரக பகுதிகளில் காய்கறி விதைத்தளங்கள் ரூ.30 மானிய விலையில் 5,200 தொகுதிகள் மற்றும் ஊட்டச்சத்து தளங்கள் ரூ.75 மானிய விலையில் 4,500 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.


மேலும், தமிழ்நாடு மாநில தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.227.69 லட்சம் மதிப்பீட்டில் 16,700 பயனாளிகள் பலனடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவை நெருக்கமான குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்றடைய, முதல்வரின் உத்தரவின் பேரில் நடமாடும் விற்பனை வண்டிகள் செயல்படுத்தப்பட்டன. இதற்காக ரூ.15,000 மானியத்தில் ரூ.28.5 லட்சம் மதிப்பீட்டில் 190 விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டு 190 பயனாளிகள் இதனால் பயனடைந்துள்ளனர்.


இத்திட்டங்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு நேரடி பயன்கள் ஏற்பட்டு வருகின்றன எனவும், தொடர்ச்சியாக மேலும் பல நலத்திட்டங்கள் ஊட்டச்சத்து பாதுகாப்பையும், வாழ்வாதார வளர்ச்சியையும் நோக்கி செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies