Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி மீண்டும் தொடக்கம் – மாவட்ட ஆட்சியர் மலர்தூவி தொடங்கி வைத்தார்.


பென்னாகரம், ஜூலை 14 (ஆனி 30) - 

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவடைந்ததைத் தொடர்ந்து, பரிசல் இயக்கத் தடை நீக்கப்பட்டு மீண்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒகேனக்கல்லில் பரிசல் சவாரியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.07.2025) மலர்தூவி தொடங்கி வைத்தார். நிகழ்வில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி. கே. மணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


முன்னதாக, கடந்த 20.06.2025 அன்று கர்நாடக அணைகளிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறியதால் — வினாடிக்கு 70,000 கனஅடி வரத்து — மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கத்துக்கும் பொதுமக்கள் குளிப்புக்கும் தடை விதித்திருந்தது. தற்போது கர்நாடகா அணைகளிலிருந்து நீர் வெளியீடு குறைய, ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் வரத்து 18,000 கனஅடியாக குறைந்துள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பி வாழும் பலர் மீண்டும் வேலைவாய்ப்புக்குள் வருவதால் மகிழ்ச்சியடைந்தனர். தொடக்க நிகழ்வில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பென்னாகரம் வட்டாட்சியர் திரு. பிரசன்னாமூர்த்தி மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884