Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாவட்ட MSME நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊக்குவிப்பு மானியங்கள் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.


தருமபுரி, ஜூலை 8 (ஆனி 23):

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்குவிப்பு மானியங்களை தருமபுரி மாவட்ட நிறுவனங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.


முக்கிய ஊக்குவிப்பு மானியங்கள் பின்வருமாறு:

  1. காப்புரிமை / முத்திரை பதிவு / புவிசார் குறியீட்டிற்கான ஊக்கதொகை:

    • காப்புரிமைக்கு 75% மானியம் (அதிகபட்சம் ₹3 லட்சம்)

    • முத்திரை பதிவு மற்றும் புவிசார் குறியீட்டிற்கு 50% மானியம் (அதிகபட்சம் ₹1 லட்சம்)

  2. முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டண மானியம்:

    • பின்தங்கிய பகுதிகளில் நிலம் வாங்கும் MSME நிறுவனங்களுக்கு 50% வரை மானியம்

  3. எரிசக்தி தணிக்கை மானியம் (PEACE):

    • எரிசக்தி கணக்கீடு செலவில் 75% (அதிகபட்சம் ₹1 லட்சம்)

    • புதிய இயந்திரங்கள் வாங்கும் MSME-க்களுக்கு 50% மானியம் (அதிகபட்சம் ₹10 லட்சம்)


தகவல் மற்றும் விண்ணப்பங்களுக்கு: இணையதளம்: https://msmeonline.tn.gov.in அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தருமபுரி ஆகியோர் மூலம் தொடர்புகொள்ளலாம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884