இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) 2025 ஆம் ஆண்டுக்கான 11-வது குறும்பட போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து வயதினருக்கும் திறந்தவையாக, நாட்டின் குடிமக்களிடமிருந்து குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
போட்டியின் முக்கிய அம்சங்கள்:
🏆 முதல் பரிசு – ₹2,00,000
🥈 இரண்டாவது பரிசு – ₹1,50,000
🥉 மூன்றாவது பரிசு – ₹1,00,000
🔹 கூடுதலாக, மூன்று சிறப்பு பரிசுகள் மற்றும் நான்கு சிறப்பு சான்றிதழ்கள் (ஒவ்வொன்றுக்கும் ₹50,000) வழங்கப்படும்.
போட்டிக்கான விதிமுறைகள்:
🎥 குறும்படம் – குறைந்தபட்சம் 3 நிமிடங்கள், அதிகபட்சம் 10 நிமிடங்கள்
🗣 மொழி – எந்த இந்திய மொழியிலும் / ஹிந்தி / ஆங்கிலம் (சப்டைட்டிலுடன்)
📧 சமர்ப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் – nhrcshortfilm@gmail.com
📅 கடைசி நாள் – 31 ஆகஸ்ட் 2025
மனித உரிமை விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில், மாணவ, மாணவியர்கள், பொது மக்கள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோரின் அதிகபட்ச பங்கேற்பை ஊக்குவிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.