Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான இணையவழி முன்பதிவு தொடக்கம்.


தருமபுரி, ஜூலை 19 | ஆடி 03 -

தருமபுரி மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான இணையவழி முன்பதிவு தொடங்கியுள்ளது. இப்போட்டிகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமை கீழ், தேசிய அளவிலான தரத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார்.


இந்த ஆண்டுக்கான போட்டிகளில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் ஐந்து பிரிவுகளில் பங்கேற்கலாம். மொத்தம் 37 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட மற்றும் மண்டல அளவுகளில் நடைபெறவுள்ளன.


மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ரூ.3,000 முதல் ரூ.1,000 வரையிலான பணப்பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ரூ.1,00,000 வரை பரிசு வழங்கப்பட உள்ளது. குழு போட்டிகளிலும் ரூ.75,000 வரை பரிசுகள் வழங்கப்படும். இந்த சான்றிதழ்கள் மூலம், மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்புகளில் பல்வேறு சலுகைகளை பெறலாம்.


போட்டிகளில் பங்கேற்க விரும்பும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தோர், 2025 ஜூலை 17ஆம் தேதி முதல், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளங்கள் www.sdat.tn.gov.in மற்றும் www.cmtrophy.sdat.in ஆகியவற்றில் இணையவழியாக முன்பதிவு செய்யலாம். போட்டிகளில் பங்கேற்பதற்கான பதிவின் கடைசி தேதி ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 6 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்களுக்கே போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.


எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இணையவழியாக முன்பதிவு செய்து போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies