Type Here to Get Search Results !

ஆடி அமாவாசை: ஒகேனக்கலில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்த பொதுமக்கள்.


ஒகேனக்கல் , ஜூலை 24 | ஆடி 08 -

ஆடி அமாவாசையை முன்னிட்டு, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு ஏராளமான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே திரண்டுள்ளனர். தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் திரளாக வந்துள்ளனர். இந்துக்களின் நம்பிக்கையின்படி, ஆடி அமாவாசை தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடி, முன்னோர்களை நினைத்து திதி செய்து, தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது ஆத்மா சாந்தியடையும் என நம்பப்படுகிறது. மேலும், ஏழைகள் மற்றும் இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தொண்டு செயற்பாடுகள் மூலம் கர்மவினைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், பிறகு தர்ப்பணம் செய்து, பித்ரு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். தர்ப்பணம் செய்யும் இடங்களில் விருதாக பிரம்மணர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். தற்போது காவிரி ஆற்றில் வினாடிக்கு 18,000 கன அடி அளவில் தண்ணீர் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக அளவிலான மக்கள் திரண்டுள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல் காவல்துறையினர் முழு கண்காணிப்பில் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் பெருக்கம் மற்றும் மக்கள் திரளால், கட்டுப்பாடுகளுடன் முகாமைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies