Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு அடுத்த சிக்கார்த்தனஅள்ளி கரக செல்லியம்மன் கோவில் நிலம், நீதிமன்ற உத்தரவு இந்து அறநிலைய துறை அதிகாரிகள் - பொது ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை.


பாலக்கோடு, ஜூலை 11-

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சிக்கார்தன அள்ளியில் பிரசித்தி பெற்ற கரக செல்லியம்மன் கோவில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 34 ஏக்கர் நிலம் சில தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது, நீதிமன்றம் விரைவில் கோவில் நிலங்களை பொது ஏலம் விட வேண்டும் என தீர்ப்பு வழங்கி பல மாதங்கள் ஆகியும், இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கோவில் நிலத்தை ஏலம் விடாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டு, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், கோவிலுக்கு வர வேண்டிய வருமானம் வராமல் உள்ளதால்  கோயில் திருப்பணிகள், பூஜைகள் போன்ற கோயிலின் அன்றாட பணிகள்  கூட செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.


மேலும் கோயில் நிலத்தில் இருந்த பழமையான புளியமரம் சாய்ந்து விழுந்து 3 மாதமாகியும் அதனை ஏலம் விட அதிகாரிகள் முன்வரவில்லை என்றும்  எனவே தமிழக முதல்வர் உடனடியாக கோயில் நிலம் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மெத்தன போக்கை கடைபிடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884