Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரியில் TNPSC Group 4 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் – மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.


தருமபுரி, ஜூலை 10 (ஆனி 26) :

வரும் ஜூலை 12, 2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குழு–4 ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குறித்த முன்னேற்பாடுகள் தொடர்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.


இந்த வருடம் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 150 தேர்வு மையங்களில், சுமார் 45,095 தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தேர்வின் ஒழுங்கும், பராமரிப்பும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 150 ஆய்வு அலுவலர்கள், 9 பறக்கும்படை அலுவலர்கள், 32 மொபைல் யூனிட்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மாவட்டத்தில் தேர்வுக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு அணுக எளிதாக்க, பேருந்துகள் நிறுத்தும் மற்றும் சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


மாவட்ட ஆட்சியர் திரு. சதீஸ் அவர்கள் கூறியதாவது:

“தேர்வர்கள் தங்களது அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம், காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை, தேர்வு மையத்திற்குள் நுழைய வேண்டும். அதற்குப் பிந்தி எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் நுழைவு அனுமதிக்கப்படாது. எனவே அனைவரும் நேரத்திற்கு முன்பாக சென்று இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.”


இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா, TNPSC துணைச் செயலாளர் சதீஷ்குமார், பிரிவு அலுவலர் வெங்கடேச பெருமாள், மற்றும் பல அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884