Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரியில் பேரீச்சை பழம் சாகுபடிக்கு அமோக வரவேற்பு.


தருமபுரி, ஜூலை 15 (ஆனி 31) -

பாலைவன நாடுகளில் மட்டுமே வளரக்கூடியதாக கருதப்பட்ட பேரீச்சை மரம், தற்போது தருமபுரி மாவட்டத்தில் வறட்சிக்குப் பெயர் பெற்ற அரியகுளம் கிராமத்தில் பயிரிடப்பட்டு, அமோக வெற்றியுடன் விளைச்சலை வழங்கி வருகிறது. விவசாயி நிஜாமுதீன், சவுதி அரேபியாவில் பேரீச்சை பண்ணையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், “இந்த பயிர் நம் நாட்டின் வறட்சிப் பகுதிகளிலும் வளரக்கூடும்” என்ற நம்பிக்கையுடன், வெளிநாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேரிச்சை கன்றுகளை இறக்குமதி செய்து, சோதனையாக தனது பண்ணையில் வளர்த்தார்.


இன்று, அவரது நிலத்தில் 15 ஏக்கர் பரப்பளவில், பர்ரி, மஸ்தூர், அம்மர் உள்ளிட்ட 32 வகை பேரிச்சை மரங்கள் வளர்கின்றன. இதில், பர்ரி என்ற திசு வளர்ப்பு வகை, தருமபுரியின் கடும் வறட்சியையும் தாண்டி சிறந்த விளைச்சலை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.


நிஜாமுதீன் கூறுகையில்:
“பேரிச்சை ஒரு வேலையாட்கள் தேவைப்படாத, தண்ணீருக்கேற்ப சாமர்த்தியமிக்க பணப்பயிர் ஆகும். மூன்று ஆண்டுகளில் பயிருக்கு நல்ல மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ பேரிச்சை பழத்திற்கு ₹250 முதல் ₹300 வரை விலை கிடைக்கிறது. மொத்த வியாபாரிகள் நேரடியாக பண்ணைக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். ₹50க்கும் விற்கப்பட்டாலும் விவசாயிக்கு நஷ்டம் இல்லை. மேலும், இந்த மரங்கள் 90 ஆண்டுகள் வரை காய்க்கும் திறன் கொண்டவை.” என்றார்.


விவசாய வளர்ச்சிக்காக, வெளிநாட்டு ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட செடிகளை தனது தோட்டத்தில் வளர்த்து, அவற்றை மற்ற விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறார். இதன் மூலம், பெரும்பாலான விவசாயிகளும் வறட்சியால் பாதிக்கப்படாத பயிர் ஒரு மாற்று வழியாக அமையலாம் என நம்பிக்கை உள்ளது.


தொழில் நெறி மற்றும் நன்மைகள்:

  • வறட்சியை தாங்கும் பயிர்

  • குறைந்த செலவில் அதிக லாபம்

  • நீண்ட ஆயுளுடைய பயிர் (90 ஆண்டுகள் வரை காய்க்கும்)

  • மொத்த வியாபாரிகள் நேரடியாக வாங்கும் சந்தை

  • வேலையாட்கள் தேவை குறைவு, நீர் தேவை குறைவு


இந்நிலையில், நிஜாமுதீன் கூறியதாவது:

"இன்றைய காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட முடியாமல் அண்டை மாநிலங்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பேரிச்சை போன்ற பயிர்களுக்கு தமிழக அரசு மானியங்களை அதிகரித்து, ஊக்கமளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884