Type Here to Get Search Results !

பாலக்கோடு அருந்ததியர் தெருவில் ₹15 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை பணிகள் துவக்கம்.


பாலக்கோடு, ஜூலை 13 (ஆனி 28):

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியின் 9-வது வார்டில் அமைந்துள்ள அருந்ததியர் தெருவில் சாலை மேம்பாட்டு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்ட நாட்களாக உள்ள கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், நான்கு தெருக்களில் ₹15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் திட்டம் அரசால் ஒப்புதல் பெற்றது.


இந்த நிதி, அயோத்திதாசர் பண்டிதர் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளை துவக்கும் நிகழ்வு, பேரூராட்சி தலைவர் திரு. பி.கே. முரளியின் தலைமையில் நடைபெற்று, பூமி பூஜை செய்து சாலை பணி தொடக்கி வைக்கப்பட்டது. 


இந்த நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் திருமதி தீபா சரவணன், திருமதி லட்சுமி ராஜசேகர், திருமதி ராஜி, திரு. அசோக், திரு. தேவன், திரு. சரவணன், திரு. முருகன், மற்றும் திரு. மாரியப்பன் ஆகியோர் பங்கேற்று பணிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், பல்வேறு கட்சியினரைச் சேர்ந்த தொண்டர்கள், பொதுமக்கள், மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.


இப்பணிகள் முடிவடைந்ததும், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இடையூறுகளின்றி சாலையை பயன்படுத்த இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பாலக்கோட்டில் உள்ள பின் தங்கிய பகுதிகளில் மேம்பாடுகள் நடை பெறும் முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies