Type Here to Get Search Results !

கெரகோடஅள்ளியில் சட்டவிரோத டீசல் விற்பனை: ஒருவர் கைது | 20 லிட்டர் டீசல் பறிமுதல்.


காரிமங்கலம், ஜூலை 14 (ஆனி 30) -

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் லாரிகளில் இருந்து கள்ளமாக டீசல் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திருடப்பட்ட டீசலில் மண்ணெண்ணெய் உள்ளிட்ட கலப்படங்கள் கலந்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதில், சில வாகன ஓட்டிகள் கூட உடந்தையாக இருப்பதாகவும், இதனால் வாகன உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த கலப்பட டீசலை பயன்படுத்தும் வாகனங்களின் என்ஜின் விரைவில் பழுதாகி வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் பாலக்கோடு டிஎஸ்பி மனோகரனிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், டிஎஸ்பியின் உத்தரவின்படி, காரிமங்கலம் போலீசார் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் காரிமங்கலம் நெடுஞ்சாலையில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.


அப்போது, கெரகோடஅள்ளி பாலம் அருகே, சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் கீழ்சவுளுப்பட்டி சேர்ந்த சக்திவேல் (47) என்பதும், கள்ளமாக டீசல் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 20 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies