Type Here to Get Search Results !

சாமியார் தோட்டம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: தாய்-மகன் படுகாயம்.


பாலக்கோடு, ஜூலை 14 (ஆனி 30) -

தருமபுரி மாவட்டம் வேப்பிலை அள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹரிகரன் (26), தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி காலை, தனது தாயார் சுலோசனா (46) உடன், மோட்டார் சைக்கிளில் மாரண்டஅள்ளியில் இருந்து வெள்ளிசந்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாமியார் தோட்டம் முனியப்பன் கோயில் அருகே சென்றபோது, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென வலது பக்கம் திரிந்தது. இதனால், ஹரிகரன் செலுத்திய சைக்கிள் அதே திசையில் சென்ற அந்த மோட்டார் சைக்கிளில் மோதியது.


விபத்தில் ஹரிகரனும், அவரது தாயாரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் உடனே அவர்களை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies