Type Here to Get Search Results !

சாமனூர் ஊராட்சியில் புதிய துணை சுகாதார நிலையம் – முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.


பாலக்கோடு, ஜூலை 7 (ஆனி 23, சுபகிருது) –

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சாமனூர் ஊராட்சியில் ரூ.42.49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சுமார் பத்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இதுவரை பஞ்சப்பள்ளி அரசு சுகாதார நிலையத்திற்கு 10 கிமீ தொலைவுக்குச் சென்று வந்தனர். இந்நிலை மாற்றும் வகையில் இந்த புதிய கட்டிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டியமைக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.


திறப்பின் தொடர்ச்சியாக மாவட்ட சுகாதார அலுவலர் பூபேஸ் ஆலோசனைப்படி, வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு தலைமையில், மருத்துவர்கள் சோனியா, இளங்கோ, மேற்பார்வையாளர் இளவரசு மற்றும் ஊரமைப்பாளர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வை தொடக்கி வைத்தனர். துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்ட நிகழ்வில் சுகாதாரப் பணியாளர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies