Type Here to Get Search Results !

சி.எம்.புதுர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய மொபட் – முதியவர் படுகாயம்.


தருமபுரி, ஜூலை 6 (ஆனி 22, சுபகிருது) –

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதுர் நெடுஞ்சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதிய விபத்தில் 60 வயதுடைய விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர் பொம்மனூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (60) என்பவராகும். அவர் ஜூலை 4ம் தேதி இரவு, தனது மொபட்டில் மாரண்டஅள்ளியில் இருந்து வெள்ளிசந்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சி.எம்.புதுர் அருகே சாலையோரத்தில் நிறுத்தியிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் செல்லும் மொபட் சாலையில் கவிழ்ந்து, தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவ்விபத்து குறித்து முதியவர் முனிராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies