Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோட்டில் 2000 ஆண்டு பழமையான பரமேஸ்வரன் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


பாலக்கோடு, ஜூலை 7 (ஆனி 23, சுபகிருது) –

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கோட்டை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பரமேஸ்வரன் சுவாமி கோயில், 2000 ஆண்டு பழமை வாய்ந்த, மக்கள் பக்தி மற்றும் மரபு சார்ந்த முக்கிய தலம் ஆகும். புனரமைப்புப் பணிகள் முடிந்து 40 ஆண்டுகள் கழித்து, இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா ஜூலை 8 அன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

விழா முன்னதாக கணபதி பூஜையுடன் தொடங்கி கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது. முக்கிய நாளான ஜூலை 8ஆம் தேதி அதிகாலை முதல், கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேத பாராயணம், நான்கு கால வேள்வி பூஜை, ரக்ஷாபந்தன மற்றும் நாடிசந்தனம் ஆகிய ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன.


அதன் பின் யாகசாலையிலிருந்து புனித தீர்த்த கலசம் எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் உச்சியில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஸ்ரீ பரமேஸ்வரன் சுவாமிக்கு வாசனை திரவியங்கள் மற்றும் பூக்களால் அபிஷேகம் செய்து, அலங்கரித்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்காக சிறப்பு தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற்றனர். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


இந்த விழா சிறப்பாக நடைபெற ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் இணைந்து முழுமையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884