Type Here to Get Search Results !

காரிமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை அறிவிப்பு.


தருமபுரி, ஜூலை 28 | ஆடி 12 -


தருமபுரி மாவட்டத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள காரிமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) 2025-ம் கல்வியாண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் அறிவித்துள்ளார்.


இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சேர்க்கை பெற, குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அதற்கும் மேற்பட்ட கல்வித்தகுதியுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.


இங்கு ஓராண்டும், ஈராண்டும் ஆகிய இரண்டு கால அளவுகளில் 6 தொழிற்பிரிவுகள் செயல்படுகின்றன. அவை:

  1. Industrial Robotics and Digital Manufacturing Technician

  2. Advanced CNC Machining Technician

  3. Multimedia Animation and Special Effects

  4. Central Air Condition Plant Mechanic

  5. Electrician

  6. Plumber (Advanced)


மேலும் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர், கும்பாரஅள்ளி ஊராட்சி (சமுதாயக் கூடம்), கொள்ளுப்பட்டி, காரிமங்கலம், தருமபுரி – 635 111 என்ற முகவரியில் உள்ள ஐ.டி.ஐ அலுவலகத்தில் நேரில் செல்லலாம். அதேபோல், 99402 72267, 82203 69209, 86955 71099 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம்.


மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தொழில் முனைவோராக உருவெடுக்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884