![]() |
Image source : google.com |
தருமபுரி, ஜூலை 23 | ஆடி 07 -
இந்தத் திட்டத்தின் கீழ் தேவையான தகுதிகள் பின்வருமாறு:
-
தேவாலயம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக சொந்தக் கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும்.
-
தேவாலயம் எந்தவொரு வெளிநாட்டு நிதியுதவியையும் பெற்றிருக்கக்கூடாது.
-
ஒருமுறை மானியம் பெற்ற தேவாலயம், அதற்குப் பிறகு 5 ஆண்டுகள் வரை மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்றது.
அரசு சமீபத்தில், பின்வரும் கூடுதல் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையிலும், கட்டடத்தின் வயதின்படி மானியத் தொகையை உயர்த்தியும் அறிவுறுத்தியுள்ளது:
அனுமதி பெற்ற கூடுதல் பணிகள்:
-
தேவாலய பீடம் கட்டுதல்
-
கழிவறை வசதி அமைத்தல்
-
குடிநீர் வசதிகள் உருவாக்கல்
-
ஸ்டாண்ட், மைக்செட், ஒலிப்பெருக்கி ஏற்பாடு
-
நற்கருணை பேழை பீடம்
-
திருப்பலிக்காக தேவையான பாத்திரங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், பெஞ்சுகள்
-
தேவாலய சுற்றுச்சுவர் அமைத்தல்
கட்டட வயது | வழங்கப்படும் மானியம் |
---|---|
1. 10–15 ஆண்டுகள் | ₹10 லட்சம் |
2. 15–20 ஆண்டுகள் | ₹15 லட்சம் |
3. 20 ஆண்டுகள் மற்றும் அதற்குமேல் | ₹20 லட்சம் |
திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தேவாலயங்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4ஆம் தளத்தில் அமைந்துள்ள, அறை எண் 512 – மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தை நேரில் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம். இத்தகவலை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ளார்.