Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு அருகே காதல் ஜோடி பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம்


பாலக்கோடு, ஜூலை 3 (ஆனி 18):

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள எம்.செட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாரியப்பனின் மகள் நந்தினி (வயது 20), அதே பகுதியில் வசிக்கும் காவேரியின் மகன் ஏழுமலை (வயது 23) ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரது காதலுக்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த மாதம் 15ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருச்சியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், நண்பரின் வீட்டில் தங்கி இருந்தனர்.


பெற்றோர் தேடிக்கொண்டிருப்பதை அறிந்த காதலர்கள், பாதுகாப்புக்காக இன்று (புதன்கிழமை) மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் தஞ்சம் புகன்றனர். இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோரையும் தொடர்பு கொண்டு, காவல் நிலையத்திற்கு வரச்செய்தனர். நந்தினியின் பெற்றோர் இத்ததிருமணத்தை ஏற்க மறுத்தனர். ஆனால், நந்தினி உறுதியாக தனது காதல் கணவருடன் வாழ விருப்பமுள்ளதாகக் கூறியதால், போலீசார் இருவரையும் ஒன்றாக அனுப்பிவைத்தனர். காதலுக்காக தஞ்சம் புகுந்த இச்சம்பவம் மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies