Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தண்ணீர் குழாய் உடைப்பு காரணமாக விவசாயி தீக்குளிக்க முயற்சி – பாலக்கோட்டில் பரபரப்பு.


பாலக்கோடு, ஜூலை 3 (ஆனி 18):

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள குண்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நித்தியானந்தன் (வயது 41) வெண்டைக்காய் சாகுபடியில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சினையால், தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்தியானந்தன், மாதையன் என்பவரின் நிலத்தை குத்தகை எடுத்துப் பயிர் செய்கிறார். அந்த நிலத்திற்கு தேவையான தண்ணீர் குழாய், அவரது அண்ணன் வடிவேல் (வயது 44) என்பவரின் நிலத்தின் வழியாக செல்கிறது. இருவருக்கும் நிலம் தொடர்பான முன்விரோதம் இருந்தது.

இந்தத் தகராறு காரணமாக, கடந்த முந்தைய நாள் வடிவேல் தண்ணீர் குழாயை “என் நிலம் வழியாக தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டேன்” என கூறி உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வெண்டைக்காய் செடிகள் காய்ந்து கருகியதாக நித்தியானந்தன் வேதனையுடன் தெரிவித்தார்.


தன் வயலில் பயிர்கள் அழிந்ததால் மனமுடைந்த நித்தியானந்தன், பெட்ரோல் கேனுடன் பாலக்கோடு காவல் நிலையம் வந்தார் மற்றும் தீக்குளிக்க முயன்றார். போலீசார் உடனடியாக அவரை தடுத்து, பெட்ரோல் கேனை பறித்து சமாதானப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, நித்தியானந்தனின் புகாரின் அடிப்படையில் அவரது அண்ணன் வடிவேலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், தீக்குளிக்க முயன்ற நித்தியானந்தன் மீதும் தனிப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies