![]() |
மாதிரி படம். |
பென்னாகரம், ஆடவை (ஆனி) 14-
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள குள்ளாத்திரம்பட்டி குறுந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மாணிக்கத்தின் மகன் குணசேகரன் (வயது 42), பென்னாகரம் கோர்ட் அருகே ஒரு கார் பட்டறையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று (ஜூன் 28) மாலை, பணியின் போது காரை கழுவிக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதையடுத்து, குணசேகரன் திடீரென தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக உறுதி செய்தனர். இந்த திடீர் மரணச் செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். குறிப்பாக அவரது மனைவி சத்யா மற்றும் இரண்டு மகள்கள் துயரத்தில் மூழ்கினர். இது தொடர்பாக அவரது மனைவி சத்யா அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மரணத்தின் காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயரமான சம்பவம், பென்னாகரத்தையும், அருகிலுள்ள பகுதிகளையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மிக அவசியமாகும் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்துகிறது.