Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பென்னாகரத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக 436 ஆண்டுகள் பழமையான தர்கா இடமாற்றம்.


பென்னாகரம், ஜூலை 3 (ஆனி 18)-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மடம் கிராமத்தில் அமைந்திருந்த 436 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகான் ஜும்லி பீர் காதரி தர்கா, சாலை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக சமீபத்தில் இடம் மாற்றப்பட்டது. இந்த தர்கா, ஒகேனக்கல்–பென்னாகரம் நெடுஞ்சாலையின் மடம் பகுதியில் இருந்தது. தற்போது, திருப்பத்தூர் முதல் ஒகேனக்கல் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில், சாலையில் நேரடியாக அமைந்திருந்த தர்காவை மாற்ற வேண்டிய தேவையை நெடுஞ்சாலைத் துறை முன்வைத்தது.

இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும், தர்கா நிர்வாகக் குழுவையும் சேர்ந்த ஆலோசனையில், தர்காவை சாலையின் ஓரமாக இடமாற்றம் செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவை பென்னாகரம் இஸ்லாமிய சமுதாயத்தினர் ஆதரித்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு தர்கா இடமாற்ற பணியை அமைதியாக நிறைவேற்றினர். பழமைவாய்ந்த ஆன்மிகக் கட்டிடத்தை பாதுகாக்கவும், மக்கள் நலனுக்கான உள்கட்டமைப்புப் பணி தொடரவும் இந்த முயற்சி ஒரு முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies