Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மாணவன் தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் சாதனை.


டேராடூன், ஜூலை 1 –

தேசிய அளவில் நடைபெற்ற 20வது இந்தியன் நெஷனல் ஷார்ட் ட்ராக் ஸ்பீட் ஐஸ் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் தருமபுரி மாணவன் இ.நலேஷ் அரைஇறுதி வரை முன்னேறி சிறப்பான சாதனை புரிந்துள்ளார். இந்த போட்டி ஜூன் 25 முதல் 28 வரை டேராடூனில் நடைபெற்றது. இதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 20க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து 34 போட்டியாளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

அவர்களில் தருமபுரியைச் சேர்ந்த ஸ்ரீ விஜய் வித்யாஷிரம் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இ.நலேஷ் என்ற மாணவன், முதன்முறையாக தேசிய போட்டியில் பங்கேற்று அரை இறுதி வரை முன்னேறியுள்ளார். முன்னதாக ஹரியானாவில் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் இ.நலேஷ் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று தேசிய போட்டிக்குத் தேர்வாகியிருந்தார்.


இ.நலேஷின் பெற்றோர் G.இளையராஜா மற்றும் K.ராதிகா கூறுகையில், “ஐஸ் ஸ்கேட்டிங் ஒரு ஒலிம்பிக் தர விளையாட்டு. நமது மகன் இந்தப் போட்டியில் அரை இறுதி வரை சென்றது பெருமை அளிக்கிறது. வரவிருக்கும் போட்டிகளில் பதக்கம் வென்று தருமபுரிக்கு இன்னும் பெருமை சேர்க்க நிச்சயம் கடினமாக பயிற்சி எடுப்போம்” எனக் கூறினர். மேலும், ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் மற்ற மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்து தங்களது திறமையை வெளிப்படுத்தி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies