தருமபுரி, ஜூன் 07-
இந்த நிகழ்வில் பால் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ரஞ்சித் குமார் வரவேற்புரையுடன் துவக்கிக் கொண்டு, பிளான்ட் மேலாளர் நவீன், மண்டல மேலாளர் சிவப்பிரகாசம், தருமபுரி மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில் விழா நடைபெற்றது.
2025ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் – “Food Safety: Science in Action” என்பதை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில், உணவு பாதுகாப்பின் அடிப்படை அம்சங்கள், தன் சுத்தம், சமையலறை சுத்தம், பாதுகாப்பான தயாரிப்பு நடைமுறை, உணவு தவறானதும், கலப்படமிருந்தாலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், உணவு ஒட்டுமொத்தமாக நன்மையை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
ஐந்து முக்கிய தூண்கள் பற்றிய தகவல்:
-
தனிநபர் மற்றும் சுற்றுப்புற சுத்தம்.
-
சமையல் முறைகளில் சுகாதார நடைமுறை.
-
உணவுப் பொருள் வாங்கும் முன் லேபிள் தகவல்கள் கவனித்தல்.
-
உணவுப் பொருள் கெடாமல், கலப்படமின்றி இருப்பதை உறுதி செய்தல்.
-
உண்ணும் உணவின் தகவல்களை நன்கு அறிந்து தேர்வு செய்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக