பாலக்கோடு, ஜூன் 7:
இஸ்ரேலின் இந்த இனப்படுகொலை போர் நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் பின்தள ஆதரவு அளித்து வருகின்றன என்ற காரணத்தையும் முன்னிறுத்தி, இஸ்ரேல் அரசு தனது தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் கார்ல்மார்க்ஸ் தலைமையிலானார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, முத்து, மாவட்டக்குழு உறுப்பினர் கலாவதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சேகர், வட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, வரதராஜன், முருகன், நக்கீரன், ஆறுமுகம் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் ரவி, சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
அரசுகள் மௌனமாக இருப்பது குற்றம் எனவும், பொதுமக்கள் மனிதநேயத்துடன் இந்த தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக