தருமபுரி, ஜூன் 14:
இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் ரத்ததான உருவத்தில் அமர வைக்கப்பட்டு, சிவப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. எதிர்கால சமூகத்தின் உறுப்பினர்களான மாணவர்கள், இரத்ததானத்தின் சமூக அவசியம் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில், டான் பள்ளி நிர்வாக இயக்குநர் உதயகுமார், செயலாளர் சவிதா உதயகுமார், மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் C.K.M. இரமேஷ், BGR மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ், மாருதி இரத்த வங்கி பிரதிநிதி வெங்கடாசலம், பியூவிஷன் உதயகுமார், எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், செய்தியாளர் நந்தகுமார், பத்திரிகையாளர் பிரேம், பள்ளி முதல்வர் ஜீவா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் மற்றும் அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சையத் ஜாபர், தன்னார்வலர்கள் கணேஷ், கோகுல்ராஜ், குணசீலன், அம்பிகா, பிரேமா ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக