Type Here to Get Search Results !

புலிகரையில் ரூ.8 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் இன்னும் பயன்பாட்டிற்கு வராதது ஏன்? – பொதுமக்கள் கேள்வி.



பாலக்கோடு, ஜூன் 09-

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், புலிக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட புலிக்கரை கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.8 இலட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. மக்கள் தண்ணீர் தட்டுப்பாடால் அவதிப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், குறித்த சுத்திகரிப்பு நிலையம் இதுவரை பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.


குடிநீர் தேவைகள் பெரிதும் அதிகரிக்கும் கோடை பருவத்தில், மக்கள் தாகம் தீரும் வகையில் இந்நிலையை உடனடியாக கவனத்தில் கொண்டு, சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து மக்களுக்கு பயன்படுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “கண்காட்சி பொருளாகவே இருப்பதற்குப் பதிலாக, பொதுநலனுக்காக செயலில் இருக்க வேண்டும்” என வலியுறுத்தும் மக்கள், நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies