தருமபுரி, ஜூன் 5-
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கெரகோடஹள்ளி பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் காரிமங்கலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி மற்றும் பைசுஹள்ளி சட்டக் கல்லூரி பகுதிகளில் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
இதன் காரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஒகேனக்கல் குடிநீர் குழாய்களை இடமாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக கீழ்காணும் தேதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்:
-
10.06.2025 – சட்டக் கல்லூரி, மாட்லாம்பட்டி பகுதியில்
-
13.06.2025 – காரிமங்கலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி பகுதியில்
-
16.06.2025 முதல் 17.06.2025 வரை – கெரகோடஹள்ளி பகுதியில்
இதற்கிடையில் பொதுமக்கள், உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக