தருமபுரி, ஜூன் 5:
பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சேரலாம். கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேரத் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.
வசதிகள்:
-
தினமும் மூன்று வேளை உணவு, இலவச தங்கும் வசதி.
-
10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நான்கு சீருடைகள்.
-
10, 12ம் வகுப்புகளுக்கான NEET, JEE தேர்வுகளுக்கான வழிகாட்டி நூல்கள், வினா வங்கி நூல்கள்.
-
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜமக்காளம், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பாய்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படும்.
-
மலைப்பகுதியில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
தகுதிகள்:
-
பெற்றோர்/காப்பாளர் வருட வருமானம் ரூ.2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
-
பள்ளி மாணவர்களுக்கு, கல்வி நிலையத்திலிருந்து குறைந்தது 8 கிமீ தூரத்தில் இருப்பிடமாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனை மாணவியருக்கு பொருந்தாது.
-
பள்ளி விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் 18.06.2025க்குள்
-
கல்லூரி விடுதிகளுக்கான விண்ணப்பங்கள் 15.07.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் அவை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு விடுதியிலும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் குழந்தைகளுக்காக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசின் விடுதி வசதிகள் குறித்து மாணவர்கள் பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக