Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு – மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை.


தருமபுரி, ஆடவை (ஆனி) 14-

தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் குளிப்பதும், பரிசல் இயக்கப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


மேலும், பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை வாசித்து எடுத்துக்காட்டாக பங்கேற்றார். அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் அந்த உறுதிமொழியில் பங்கேற்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதி எடுத்தனர். இந்த நிகழ்வில் பென்னாகரம் வட்டாட்சியர் பிரசன்னா மூர்த்தி, வளர்ச்சி அலுவலர் லோகநாதன், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி வெ.லோகநாதன், சுற்றுலா அலுவலர் பா.கதிரேசன் மற்றும் பிற அலுவலர்கள் பங்கேற்றனர். 

கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 70,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனைக் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திரு ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் கள ஆய்வு செய்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies