பாலக்கோடு, ஆடவை (ஆனி) 14-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் பகுதியில், இன்று (ஜூன் 28 – ஆனி 13) காலை ஒரு 70 வயது முதியவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த தர்மபுரி ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் கவனத்திற்கு: ரயில்வே தண்டவாளங்களை கடக்கும்போது பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ரயில்வே அடுக்கு பாலம் அல்லது கீழ்வழி பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதியில்லாமல் தண்டவாளத்தில் நடப்பது சட்டத்திற்கும் பாதுகாப்பிற்கும் எதிரானது என்பதை உணர்த்திக் கொள்கிறோம்.