Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 70,000 கன அடியை கடந்தது – குளிக்கவும் பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை.


ஒகேனக்கல்
, ஆடவை (ஆனி) 13-

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 70,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:

"27.06.2025 (ஆனி 13) அன்று காலை 6 மணி அளவில் காவிரியில் தண்ணீர் வரத்து 57,000 கன அடியாக இருந்தது. ஆனால் சில மணி நேரங்களில் தான் அது 65,000 கன அடியாக, பின்னர் 70,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

இது கர்நாடகாவில் உள்ள அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதன் விளைவாகும். நீர்வரத்து மேலும் கூடும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பிற்காக, மறு உத்தரவு வரும் வரை ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்படுகிறது."


மேலும், ஆட்சியர் அனைவரும் ஒகேனக்கல் காவிரி ஆற்று கரையை அணுக வேண்டாம் என்றும், அனைத்து அரசு துறைகள் மற்றும் மீட்பு படைகள் அதிரடித் தயார்நிலையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அனைவரும் நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies