பாலக்கோடில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 3ம் ஆண்டு கைப்பந்து போட்டி துவக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஜூன், 2025

பாலக்கோடில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 3ம் ஆண்டு கைப்பந்து போட்டி துவக்கம்.


பாலக்கோடு‌, ஜூன் 13-

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நண்பர்கள் கைபந்து குழு சார்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 3ம் ஆண்டு கைப்பந்து போட்டி ஸ்ரீ மூகாம்பிகை கல்வி குழும தலைவர்  கோவிந்தராஜி தலைமை வகித்து துவங்கி வைத்தார். டி.எஸ்.பி.  மனோகரன், மாநில கைப்பந்து கழக செயலாளர் மார்டின் சுதாகர், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், மாவட்ட நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபாட் ரங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த போட்டியானது தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தர்மபுரி, சென்னை, கோயமுத்தூர் , திருப்பத்தூர்,  சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள்  கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.


இப்போட்டியின் தொடக்க விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு  ஊர்வலம் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி மைதானத்தில் இருந்து தொடங்கி, காவல் நிலையம், பஸ் நிலையம், கடைவீதி வழியாக  பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை அடைந்தது, ஊர்வலத்தினை ஸ்ரீ மூகாம்பிகை கல்வி குழும தாளாளர் கோவிந்தராஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.


விளையாட்டு போட்டியினை ஸ்ரீ வித்யா மந்திரி மூகாம்பிகை கோவிந்தராஜி, டி.எஸ்.பி. மனோகரன், முன்னாள் மூத்த விளையாட்டு வீரர் வெங்கட்ராமன், ஆகியோர் பந்து வீசி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் கோகுல், நண்பர்கள் கைபந்து குழு தலைவர் மகேந்திரன், செயலாளர் சரவணன், மற்றும் முன்னாள் நண்பர்கள் குழுவின் பொறுப்பாளர்கள் கணபதி,  குமார், கணேசன், தமிழரசு தொழிலதிபர் முருகன்  மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad