குளிக்காடு கிராமத்தில் 9ம் வகுப்பு பள்ளி மாணவி மாயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 ஜூன், 2025

குளிக்காடு கிராமத்தில் 9ம் வகுப்பு பள்ளி மாணவி மாயம்.


மகேந்திரமங்கலம், ஜூன் 11-

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள குளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமாருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இவரில் நான்காவது மகளான அம்பிகா (வயது 14), ராயக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.


பொதுவாக தினமும் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும் அம்பிகா, நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார். ஆனால் அன்று பள்ளி முடிந்த பிறகு வீடு திரும்பவில்லை. பல மணி நேரமாக கடந்தும் எந்த தகவலும் இல்லாததால், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் மாணவியைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.


இதையடுத்து மாணவியின் தந்தை குமார், மகள் மாயமானதைக் குறிப்பிட்டு மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவியைத் தேடும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த சம்பவம் அப்பகுதியில் கவலைக்கிடம் ஏற்படுத்தி உள்ளதுடன், மாணவியின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad